Posts

கவிநுகர் பொழுது-17

Image
( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து) மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா? புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும். அவ்வாறெனில் திரிந்து போன ஒன்றை அடையாளம் கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டது நா. அந்த நாவே புளிப்பாய் மாறினால் என்னவாகும். அதுவும் யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிறார் தலைப்பில். யுகம் என்பது காலத்தினை அளக்கும் மிகப் பெரிய அளவீடு. அதன் நம்பகத்தன்மை குறித்த இடத்திற்கு நகரவில்லை. அதனை  ஒரு அடையாளத் தொன்மமாகக் கருதுகிறேன். கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 100% மக்கள் அற்த்தோடு வாழ்ந்தனராம். திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 75% மக்கள் அறத்தோடு வாழ்ந்தனராம். துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் வாழ்ந்த 50% சதவீத மக்கள் அறத

ஏற்புரை--தமிழ்மணவாளன்

Image
    யாவர்க்குமானவை உலகில் இருக்கின்றன அல்லது உலகில் இருப்பவை யாவர்க்குமானவை அறிதலே முதன்மை. அறியக் கொடுப்பது கடமை. காரணங்கள் பலவாய் இருக்கலாம். சாதி,மதம், இனம், பொருளாதாரம்,சமூகம், மொழி, நாடு, நிலப்பகுதி,பால்என. காரணங்கள் பலவாய் இருக்கலாம். அடிமைப்படுத்தும் காரணிகள் எதுவாயினும் அது ஒருநோய்க்கூறு.நம்மில் இருந்தாலும் உடைத்து வெளிவரவேண்டும். அதிகாரப்பீடத்தில் கெட்டிதட்டிப்போயிருக்குமெனில் தகர்க்கவேண்டும். சமத்துவம் என்பதன் வெளியை உருவாக்கவேண்டும். மேற்சொன்ன காரணிகளில் பலகவனம் பெற்று பலராலும் உரக்கக்குரல் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றுள், மாறு பாலினத்தவர்க்கான உரிமைகள் உரிய அளவில் இன்னமும் கூடபேசப்படவில்லை என்பதே உண்மை. அதற்குக்காரணம் அவர்களின் பிரச்சனை குறித்த உண்மைத்தன்மை பொதுவெளியில் உரையாடலுக்கு பரவலாய் உட்படவில்லை. மாறு பாலினத்தவர் நலன் கோரி தேசிய சட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றம் 15-04-2014 அன்று வழங்கிய மேன்மைமிகு தீர்ப்புரையின் தமிழ்ப்பிரதி இது. ”எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்