Posts

Showing posts from November, 2010

பெயர்ச்சொல்.

எது எதை எது எதுவாய்ச் சொல்கிறோம் அது அது அது அதுவாய் இருக்கிறது மாட்டை ஆடென்றும் ஆட்டை மாடென்றும் சொல்லியிருந்தால்... ஒரு வேளை மாடு ஆடாகியிருக்கலாம் ஆடு மாடாகியிருக்கலாம் இடுகுறிப் பெயர்கள் இப்படித்தான். நாலு கால் நாற்காலி மூணுகால் முக்காலி ஆமையிடம் திறமையிருந்தும் சோம்பித் தோற்றதால் ‘முயல்’... காரணம் காட்டும் பெயர்ச்சொல். நல்லதைச் செய்தால் நல்லவன் கெட்டதைச் செய்தால் கெட்டவன் செய்யும் வினையாலணையும் பெயர் கெட்டதைச் செய்தாலும் நல்லவனெனச் சொல்லச் சொல்லி கெடுபிடி செய்யும் காரணிகள்: பணம், பலம் பதவி இலக்கணப்பிழையாய்... நாயை நரியென்றால் நாய் நரியாகலாம் நரிக்குணம் என்னவாகும்...? நன்றி வருமா நரிக்கு...? இடுகுறிக்கே இதுவென்றால் சொல் வெறும் சுட்டு தான் செயலால் மட்டும் கிட்டும். சொல்லை மாற்றும் செயலை விடுத்து தொழிலை மாற்றும் வினையால் சொல் மாறும்.

பூங்காளம்மன் சரிதம்

தார்ச்சாலை விலகி யோடும் வெண்கற்கள் விரவிக் கிடக்குமந்த மீனவேலி சிறுபாதை கடந்தேகும் போதில் மேற்புறத்தே வீற்றிருக்கிறாள் பூங்காளம்மன். கோபுரமில்லை, கலசங்களில்லை, சிற்பங்களில்லை, சித்திரமில்லை, மணடபமில்லை. வெறித்துத் தகிக்கும் வெயிலுக்கிதமாய் தரு நிழலைத் தருமப்பெரும் வேப்பமரத்தின் வேர்களில் தொடங்கும் அவளின் சரிதம். ஆங்கிலேயன் ஆர்மியில் சிப்பாய் அகோர வீரபத்ர நாயுடுவின் மரணத் தீயிறங்கி மரித்துப் போனாள் மனைவி வெங்கட்டம்மா. நெருப்பில் குளிர்ந்த போது நிறை மாத கர்ப்பிணியாய் ஓர் இறப்பில் ஈருயிரிழப்பாய் நிகழ்ந்து போக, சூல் ஆடு குத்தி தொடர்ந்து செய்யும் பூஜை கால வெளியில் கனிந்து குலம் காக்கும் அம்மனாய் குடி கொண்டிருக்கிறாள். தொடர்புகள் அரிதானவக் காலத்தில் கனவு வழி தகவல் சொன்னாராம் மரித்துபோன வீரபத்ரன். தரச்சொல்லி மிலிட்டரி ஆபீஸரிடமும் பெறச்சொல்லி பங்காளியிடமும். நாயுடுவின் துப்பாக்கி போர்வாள் கேடயம் குறுங்கத்தி வழிபாட்டுக்குரியதாயின. வம்சாவழி தவிர யாருக்கும் வழங்கப்படுவதில்லை பூங்காளம்மன் முன்படையலிட்டயெதுவும். திருமணமாகிப் போன பெண்களுக்கும் கூட. மணமான

என்னை, உன்னை மற்றும் சிலரைப் பற்றிய கவிதை

பெரும்பாலும் பொழுதுகள் நினைவுகளிலேயே செலவாகிறது உன்னைப் பற்றி என்னைப் பற்றி மற்றும் சிலரைப் பற்றி . **            **         ** தேசத்தின் வரைபடமென தீட்டப்பட்டிருக்கும் அபிப்ராயச் சித்திரத்தை அத்தனை எளிதில் மாற்றுவது சாத்தியமில்லையென நினைத்திருக்கும் வேளை பூகோளத்தின் ரேகைகளையே நகர்த்தும் சுனாமியாய் பொங்கிப் பிரவகிக்கும் உன் செயல்பாட்டுப் பேரலை. **           **              ** அறிதலில் உருவாகும் அகங்காரம் ஆசானை வம்புக்கிழுக்கச் சொல்கிறது. ஆணவம் வெல்வதில்லை நண்பனே ஆயுதப் பட்டியலில் இல்லாத அகப்பையும் கொப்பரை மூடியும் ஆசானின் மனைவிக்கு ஞாபகம் உள்ள வரைக்கும். **                   **           ** ஆயிரம் முறை ஆனபோதிலும் மீண்டும் கேட்டுத்தான் தீர வேண்டுமுன் பிரஸ்தாபத்தை தவிர்க்கவே வியலாது சந்திக்கப் போகும் இன்றைய மாலைப் பொழுதிலும். **          **                 ** எத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் இயலவில்லை சிந்தாமல் பேனாவில் மை நிரப்ப. உபாயம் ஒன்றுண்டு முக்கால் குப்பி நிரம்புகையில் போதும் போதுமென மனம் நிரம்பி வழிய வேண்டும். கவனத்தின் அத்தியாவசியம் ம

ஊழல்

ஆட்சி மாறியதும் முந்தைய ஆட்சியில் ஊழல் என்று விசாரணைக் கமிஷன் அமைத்தார்கள். மீண்டும் ஆட்சி மாறியதும் விசாரணைக்கமிஷன் அமைத்ததிலேயே ஊழல் என்கிறார்கள்.

அடடா! இதுவா பெண்மை?

பளிச்சென மின்னல் ஒன்று     பட்டதும் பார்த்தேன்; அங்கே விழித்திரை தன்னில் கன்னி     வித்தைகள் புரிந்தாள்; அந்த மொழிக்குநான் விளக்கம் தேடி     முடியாமல் தவித்த போது ‘களுக்’கெனச் சிரித்துக் கண்ணை     கால்களை நோக்கிப் போட்டாள்! படபட வென்றே அந்தப்     பாய்விழி இரட்டை அம்பை உடனவள் இமைக ளாலே     உள்ளுக்குள் மூடிக் காட்டி நடனங்கள் புரிந்த போது     நானென்னை இழந்து போனேன் அடடா!இதுவா பெண்மை?     அனுபவி புரியும் உண்மை. மீண்டுமவள் பார்வைக் காக     மெதுவாகத் தலையைத் தூக்கி ஆண்டவன் முன்னே பக்தன்     அமைதியாய் நிற்ப தைப்போல் வேண்டுதல் வைத்துப் பார்த்தேன்     வேறேதோ சிந்த னையாய் தோண்டினாள் விரலால் பூமி     தொலைத்ததைத் தேடு தல்போல்! *பல்லவன் வந்தான்; அந்தப்     பாவையை அள்ளிப் போனான்; உள்ளத்தைக் கண்ணால் கொத்தி     ஓடிய அவளை விட்டு மெல்லநான் நினைவைத் தேடி     மெதுவாக நென்ச்சைத் தொட்டேன் துள்ளிடும் த்ரைமீன் போலே     துடித்தது வேக மாக! ----------------------------------------------------------- இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு  1986 * பல்லவன் - எண்பதுகளில் சென்னையில் இயங்க