Posts

Showing posts from 2012

நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து....

இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி ’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே...எனக்கும் பிடிக்கும்... ‘அழகன் அழகி ’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது. ‘அழகன் யார்..? அழகி யார்..? ’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், அவர்கள் செல்லும் ஊருக்கெல்லாம் நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள்.அவர்களைச் சந்திக்க வரும் கதாபாத்திரங்களையெல்லாம் நம்மையும் சந்திக்க வைக்கிறார்கள்.அடேயப்பா...!எத்தனைக் கதா பாத்திரங்கள்... ஒவ்வொன்றும், ஒரு சிறப்புச் சிறுகதைக்குத் தகுதி வாய்ந்த புனைவுப் புள்ளிகள்.......புள்ளிகள் தானே கோலத்தில் அடிப்படை.....புனைவுப் புள்ளிகளை வைத்து வண்ணக்கோலம் வரைந்திருக்கிறார்... இயக்குனர் நந்தா பெரியசாமி   படம் தொடங்கியது முதல், Non –stop express..
Image
வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.                                                             வடிவுடையானின்             சற்று மாறுதலாய் யோசி           வாழ்க்கை மாறும்                       தமிழ்மணவாளன் _____________________________________________________________              ’ மாற்றம் ஒன்றுதான் மாறாதது ’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன.            எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான்.                 எனக்குத் தெரிந்து, தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை   வேடிக்கைப் பார்க்கத்தோன்றும்.                 கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து எழுந்து போய்விடத் தோன்றும்.            எதைச்செய்கிறோம் என்பதல்ல, எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.எதையும் மாறுதலாய் யோசி

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. வடிவுடையானின் காம சூத்ராவைக் கடந்துவா

    எ த்தனை இயல்பாய் இருக்கிறது               இரவெல்லாம் புணர்ந்த               இந்த உலகம் ’ காமக்கடும்புனல் ’   கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம்   எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள்.      உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இயற்கை உருவாக்கிய உத்தி எனக்கூடத் தோன்றுகிறது.      எதிர்பால் ஈர்ப்பென்பது , ‘ முதல் ஆண் -- முதல் பெண் ’ தோன்றிய காலத்திலேயே உருவாகியிருக்கக்கூடும்.அவ்விதமாயின், அதன் காலம் குறித்து நம்மால் ஒருவாறு கணிக்க இயலும்.காமம் பற்றியும், காம சாஸ்திரம் பற்றியும் நம் முன்னோர் எவ்வளவோ பேசியும் எழுதியும் உள்ளனர்.பல நூல்கள் பலராலும் எழுதப்பட்டுள்ளன.      வடிவுடையான், ’ காமசூத்ராவைக் கடந்து வா ’, என்னும் நூலில், ஓர் ஆண்குரலின் சாட்சியமாக பலவிஷயங்களை   முன்வைக்கிறார். பதின்