Posts

Showing posts from December, 2012

நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து....

இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி ’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே...எனக்கும் பிடிக்கும்... ‘அழகன் அழகி ’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது. ‘அழகன் யார்..? அழகி யார்..? ’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், அவர்கள் செல்லும் ஊருக்கெல்லாம் நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள்.அவர்களைச் சந்திக்க வரும் கதாபாத்திரங்களையெல்லாம் நம்மையும் சந்திக்க வைக்கிறார்கள்.அடேயப்பா...!எத்தனைக் கதா பாத்திரங்கள்... ஒவ்வொன்றும், ஒரு சிறப்புச் சிறுகதைக்குத் தகுதி வாய்ந்த புனைவுப் புள்ளிகள்.......புள்ளிகள் தானே கோலத்தில் அடிப்படை.....புனைவுப் புள்ளிகளை வைத்து வண்ணக்கோலம் வரைந்திருக்கிறார்... இயக்குனர் நந்தா பெரியசாமி   படம் தொடங்கியது முதல், Non –stop express..