Posts

Showing posts from January, 2017

கவி நுகர் பொழுது-1 நூல் விமர்சனம்

Image
                                                          கவி நுகர் பொழுது                                                                  (   “ ஆனந்தியின் பொருட்டு   தாழப்பறக்கும் தட்டான்கள்”, நூலினை முன்வைத்து )   ஜோதிடத்தில் பொருட்படுத்தக்கூடிய நம்பிக்கையேதும் எனக்கில்லை . ஜோதிடத்தில் காலத்தைப் பகுத்து , ராகு திசை , கேது திசை , சுக்கிர திசை நடப்பதாகச் சொல்வதுண்டு . உண்மையா எனத் தெரியவில்லை . ஆனால் கதிர் பாரதிக்கு கவிதைத் திசை நடக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் . தமிழ்க்கவிதையின் நெடிய மரபில் தம ‌ க்கான வடிவத்தை கவிதைகள் தாமே தகவமைத்துக் கொண்டு வந்திருப்பதை வரலாற்று ரீதியான வாசிப்பில் அறியவியலும். " தீவிரமான மாற்றங்களைக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மொழியில்தான் கவிதைகள் உயிர்ப்புப் பெறுகின்றன . தன்னைப் பின்னகர்த்தும் காலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு , அந்தக் காலம் அளிக்கும் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டு , கவிதையை நோக்கி வருகிறவர்களைத் திருப்திப்படுத்திக