’கண்ணாடி நகரம்’
(ஜெய தேவனின், ’கண்ணாடி நகரம்’ நூலினை முன் வைத்து) ஜெயதேவன், வெகுகாலமாக கவிதையில் இயங்கி வருபவர். காலந்தோறும் மாறிவரும் கவிதைப் போக்கிலிருந்து விலகி நின்று விடாமல் உடன் வருபவர். கவிதைகளின் திசைவழிப் பயணத்தில் உற்சாகமாய்ப் பயணிப்பவர். அவரின் அண்மைத் தொகுப்பு,’ கண்ணாடி நகரம்’. கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை பெறுவது இயல்பானது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் முன்னுரை எழுதச் சொல்வதும் உண்டு. இத்தொகுப்பிற்கு, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அமிர்தம் சூர்யா, சக்தி ஜோதி ஆகிய நான்கு பேர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள். சிறப்பு என்னவெனில், கவிதைகளைப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இது புது உத்தி. பயன் யாதெனில் ஒரே கவிதையை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசவோ மேற்கோள் காட்டவோ இயலாதவண்ணம் அமைவது. ஜெயதேவன், சமகால அரசியலைத் தன் கவிதைகளின் பாடுபொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. உள்நாட்டு அரசியல் மட்டுல்லாது உலக வல்லாதிக்கத்தின் எதிர் குரலாக எழுதுகிறார். இன்றைக்கு, வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினை முடிவு செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். உலக வர்த்தக