Posts

Showing posts from July, 2018

ஏற்புரை--தமிழ்மணவாளன்

Image
    யாவர்க்குமானவை உலகில் இருக்கின்றன அல்லது உலகில் இருப்பவை யாவர்க்குமானவை அறிதலே முதன்மை. அறியக் கொடுப்பது கடமை. காரணங்கள் பலவாய் இருக்கலாம். சாதி,மதம், இனம், பொருளாதாரம்,சமூகம், மொழி, நாடு, நிலப்பகுதி,பால்என. காரணங்கள் பலவாய் இருக்கலாம். அடிமைப்படுத்தும் காரணிகள் எதுவாயினும் அது ஒருநோய்க்கூறு.நம்மில் இருந்தாலும் உடைத்து வெளிவரவேண்டும். அதிகாரப்பீடத்தில் கெட்டிதட்டிப்போயிருக்குமெனில் தகர்க்கவேண்டும். சமத்துவம் என்பதன் வெளியை உருவாக்கவேண்டும். மேற்சொன்ன காரணிகளில் பலகவனம் பெற்று பலராலும் உரக்கக்குரல் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றுள், மாறு பாலினத்தவர்க்கான உரிமைகள் உரிய அளவில் இன்னமும் கூடபேசப்படவில்லை என்பதே உண்மை. அதற்குக்காரணம் அவர்களின் பிரச்சனை குறித்த உண்மைத்தன்மை பொதுவெளியில் உரையாடலுக்கு பரவலாய் உட்படவில்லை. மாறு பாலினத்தவர் நலன் கோரி தேசிய சட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றம் 15-04-2014 அன்று வழங்கிய மேன்மைமிகு தீர்ப்புரையின் தமிழ்ப்பிரதி இது. ”எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்

பைசாசம் ----------------------------

                   நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் அலுவலகத்தில், மதிய உணவை அவர்கள் இருவரும் சேர்ந்து உண்பது தினப்படி வாடிக்கையாய் இருக்கிறது. சிரித்து மகிழ்ந்த வார்த்தகளினூடாக பிரியாணியின் மணமோ எலுமிச்சை சாதத்தின் சுவையோ …? வழக்கமாய்க் கல்லூரிக்கு அல்லது வேலைக்குச் செல்லுமவள் ஒன்பதரை மணிப்பேருந்தைத்தான் தவறாமல் பிடிக்கிறாள். நடத்துனர் இருக்கை அருகே அவளுக்கென ஒதுக்கி வைக்கிறான் ஒன்றை. எப்போது சந்தித்தாலும் வழியென்றும் பார்க்காமல் அரைமணிநேரம் பேசிச்செல்கிறாள் அவனிடம். சிரிக்கச் சிரிக்கப் பேசுமவனிடம் உரையாடுவதில் குடும்பக் கவலைகூட மறந்து போகிறதாம் அவளுக்கு. ஏதோ ஒ ரு பிரியத்தில் ’ஒருவிஷயம் பேசவேண்டும்’, என பூங்காவிற்கோ கடற்கரைக்கோ வரச்சொன்னவள் அவன் மூன்று சிகரெட் பிடிக்கும்வரை உற்றுப்பார்த்தபடி இருந்துவிட்டு, ‘மகன் டியூஷனில் இருந்து வந்துவிடுவான்’,என அவசரமாய் ஆட்டோவில் ஏறிப்போகிறாள். ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்யும் அச்சிறுவன் வாடிக்கையாளர் இல்லாத பொழுதெல்லாம் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைப் பெண்ணிடம் ஒரே அரட்டை