மனிதாபிமானம்

சிவப்பு வன்ணம்  மாறப்போகும்
தருணத்திற்காய்
வாகனத்தின் விசையூட்டி  விசையூட்டி
ஆயத்தத்தின் வீச்சை
விரலசைவில் வைத்திருப்போரும்

முன்னம் சென்றுவிடவேண்டும் என்னும்
முனைப்போடு
நிறுத்துக்கோட்டைத் தாண்டி
பரபரத்திருப்போரும்

கணப்பொழுதின் தாமதமும்
ஏற்படுத்தி விடக்கூடிய
சவால்களோடு அவசரத்தின் விளிம்பில்
நிற்பவர்களும்

யாரோ முகமறியா ஒருவரை சுமந்தபடி
அபயக்குரலெழுப்பி
ஆம்புலன்ஸ் சுழலும்  விளக்குடன்
வரும்போது
தம் வாகனத்தை நிறுத்தியோ
வேகம் குறைத்தோ
வழிவிட யத்தனிக்கும் பதற்றத்தில்  தான்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இன்னும் கொஞ்சம்
மிச்சமிருக்கும் மனிதாபிமானம்.

கவிதை : இடம்: சென்னை இரட்டைஏரி சிக்னல்
                    நேரம்: 26-09-10 காலை 10 .00 மணி

Comments

  1. miga nanraga irukkirathu kavithai.
    "sowma"

    ReplyDelete
  2. யதார்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது,மிச்சமிருக்கிற மனிதாபிமானத்தையும் சேர்த்து.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு