குப்பை பற்றி ஒரு கவிதை
குப்பைக் கவிதை எழுத வேண்டும்
ஒன்று.எனினும்
குப்பையெனத் தனியே ஏதுமில்லை.
பொருளற்ற பொருள்கள்
பயன்பாட்டின் முடிவில்
திணைகள் திரிந்து பாலையானதாய்.
பொருள்களென்றின்றி மனசுக்குள்ளும்.
மணப்பாறை பக்கமுள்ள எங்கள்
கிராமத்துக் குப்பை மேட்டில்
பரங்கிக் கொடி படர்ந்து கிடக்கும்.
சத்தான குப்பையில் ரோஜா பூக்கும்
புஷ்டியாய்.
குப்பைக்குக் க ண்காட்சி நடத்த
வேண்டும். குப்பைக் கண்காட்சி.
என் அறையில்
நல்ல புத்தகங்களும் கலைந்து
கிடந்தன குப்பையாய்.
அடுக்கி வைத்தேன்
குப்பை அகல
அடுக்கினால்.........போதாது.
கணையாழி- ஏப்ரல் 1998
ஒன்று.எனினும்
குப்பையெனத் தனியே ஏதுமில்லை.
பொருளற்ற பொருள்கள்
பயன்பாட்டின் முடிவில்
திணைகள் திரிந்து பாலையானதாய்.
பொருள்களென்றின்றி மனசுக்குள்ளும்.
மணப்பாறை பக்கமுள்ள எங்கள்
கிராமத்துக் குப்பை மேட்டில்
பரங்கிக் கொடி படர்ந்து கிடக்கும்.
சத்தான குப்பையில் ரோஜா பூக்கும்
புஷ்டியாய்.
குப்பைக்குக் க ண்காட்சி நடத்த
வேண்டும். குப்பைக் கண்காட்சி.
என் அறையில்
நல்ல புத்தகங்களும் கலைந்து
கிடந்தன குப்பையாய்.
அடுக்கி வைத்தேன்
குப்பை அகல
அடுக்கினால்.........போதாது.
கணையாழி- ஏப்ரல் 1998
Comments
Post a Comment