என்னுடன்....?
எதை எழுதி முடிக்கும் போதும்
உன்னையும் சேர்த்தே
எழுதுகிறேன்
எதை வாசித்து முடிக்கும் போதும்
உன்னையும் சேர்த்தே
வாசிக்கிறேன்
தனிமையில் அமர்ந்திருக்கும்போது
பின்புறமாய்
தோள்தட்டி விழிமலர்கிறாய்
எந்தவொரு பயணத்தின் போதும்
எதிரில் வந்து
புன்னகை பூக்கிறாய்
கனவிலும் நனவிலும்
நிகழும் இவை குறித்து
உன்னிடம் கூறுகையில்
அதற்குமுனக்கும்
எவ்விதத் தொடர்புமில்லையென
கைவிரிக்கிறாய்
பொய் தானே சொல்கிறாய் நீ...?
உன்னையும் சேர்த்தே
எழுதுகிறேன்
எதை வாசித்து முடிக்கும் போதும்
உன்னையும் சேர்த்தே
வாசிக்கிறேன்
தனிமையில் அமர்ந்திருக்கும்போது
பின்புறமாய்
தோள்தட்டி விழிமலர்கிறாய்
எந்தவொரு பயணத்தின் போதும்
எதிரில் வந்து
புன்னகை பூக்கிறாய்
கனவிலும் நனவிலும்
நிகழும் இவை குறித்து
உன்னிடம் கூறுகையில்
அதற்குமுனக்கும்
எவ்விதத் தொடர்புமில்லையென
கைவிரிக்கிறாய்
பொய் தானே சொல்கிறாய் நீ...?
Comments
Post a Comment