உரைத்தல் முரண்


கடை வீதியில் எதிர்வந்த
பெண்ணைக் காட்டி
‘நான் காதலித்த பெண்ணிவள்’
என்கிறான் கணவன்.


கல்யாண வீடொன்றில்,
வந்திருந்தவனைக் காட்டி
‘நீங்கள் பெண்கேட்டு வரும் வரை
ரொம்ப நாளாய்
இவருக்குத்தான் என்னை
கல்யாணம் செய்வதாய்ப் பேச்சு’
என்கிறாள் மனைவி.

                     ----ஏப்ரல் 2003

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு