கௌரவம்

இறுதி ஊர்வலத்தின் போது
இறைக்கப்படும் பூக்களோடு
இறந்தவர் குறித்த
விமர்சனங்களும்  தெரு முழுக்க.

ஒவ்வொரு மரணமும்
அறிவுறுத்தத்தான் செய்கிறது
எந்தக்கணத்திலும்
நிகழ்ந்து முடியக்கூடிய
வாழ்வின்
நிலையாமை பற்றி.

சில
அகால மரணங்கள்
மேலும்
அதிர்ச்சியோடு உணர்த்துகின்றன
அதையே.

ஆயினும்
இந்த மனிதர்கள்
சவ அடக்கத்தின் போதே
பிரஸ்தாபிக்கிறார்கள்
பிணத்தின் முன்னிலையில்
யாரின்
கௌரவம் முதன்மையானதென.

                                       --   மார்ச்  1999

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு