கதவு

யாவரின் வருகையையும் எதிர்நோக்கி
வரவேற்கத் திறந்திருக்கிறது
வாசற்கதவு.

திறந்து வைத்த கதவின் வழி
யாரும் வராத பொழுதில்
வெறுமை
அப்பிக்கிடக்கிறது.

கவனமாய்க் கண்காணித்துக் கொண்டிருந்த
வாசல் வழியே
மெல்ல ஒருவர் வெளியேறுகிறார்.

பிறகு மற்றொருவர்
பிறிதொருவர் என.

உள்ளே வருவதை மட்டுமே
நிச்சயப்படுத்தாத கதவின் திறப்பு
வெளிப்போதலின்
எல்லா சாத்தியங்களையும்
உள்ளடக்கியதென்பதை
உணரத் தலைப்படும் கணத்தில் தான்
அந்தக் கடைசி மனிதனும்
வெளியேறி கொண்டிருந்தான்.

                                   -------ஜூலை2003

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு