விசாரிப்பு
எந்தவொரு சந்திப்பின் போதும்
’சௌக்யமா’? வென்றே
உரையாடல் தொடங்குகிறது.
என்னை யார் சந்தித்தாலும்
நான் யாரைச் சந்தித்தாலும்
முதல் வார்த்தை அதுவாகவே
இருக்கிறது.
எதிரில் வந்த என்னைப் பார்த்து
புன்முறுவலுடன்
வினவுகிறாய் நீயும்
‘சௌக்யமா’? வென.
எப்படிச் சொல்வேன் உன்னிடத்திலென்
சௌக்யமின்மையையும்
இன்மையின் காரணமே
நீ தானென்பதையும்.
’சௌக்யமா’? வென்றே
உரையாடல் தொடங்குகிறது.
என்னை யார் சந்தித்தாலும்
நான் யாரைச் சந்தித்தாலும்
முதல் வார்த்தை அதுவாகவே
இருக்கிறது.
எதிரில் வந்த என்னைப் பார்த்து
புன்முறுவலுடன்
வினவுகிறாய் நீயும்
‘சௌக்யமா’? வென.
எப்படிச் சொல்வேன் உன்னிடத்திலென்
சௌக்யமின்மையையும்
இன்மையின் காரணமே
நீ தானென்பதையும்.
Comments
Post a Comment