மறுபக்கம்

அறைந்து சாத்தப்பட்ட கதவில் தொங்கும்
பெரிய பூட்டின் கனம் தாளாது
நசுங்கிச் சிதையும்
சந்தித்தலின் மீதான ஆர்வம்.

உரையாடலை நறுக்கிச் சிதைக்கும்
கூரிய மௌனத்தின்
நிராகரிப்பு.

மரணவீட்டின் இரவென
மனசைக் கலவரப் படுத்தும்
ப்ரயோகித்த ஒற்றைச் சொல்லின் வீச்சு.

அறிமுக மற்றவனைப் போல எதிரில்
கடந்து செல்லும்
ஒவ்வொரு முறையும் புதைக்கப்படும்
காலம் கடந்த உண்மைகள்

எனவேதான்
நினைத்த மாத்திரத்தில் சந்தோஷம்
தந்த
ஞாபகங்களை மறப்பதொன்றே
பிரதானமாய்.

இப்போது
காய்ந்த செடியைப்
பிடுங்கிய போதுதான் தெரிந்தது
வேரின் ஆழமும்
காயாத ஈரமும்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு