தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்து போனது
வியப்பாயிருக்கிறது.

காற்றுப்பரப்பில் சுவாசிக்கவியலாது
மீனுக்கு.அவ்வாறெனில்
காற்று எப்போது நீராய் மாறியது.

மீன் பறவையானதா செதில்கள்
சிறகுகளாய்.

மீனென்றால் அது காற்றாக
இருக்க முடியாது.

காற்றென்றால் அது மீனாக
இருக்க முடியாது.

காற்றாக மீனாக நீராக பறவையாக

காற்று நீர் மீன் பறவை
மீன் பறவை காற்று நீர்
நீர் மீன் பறவை காற்று

வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட
மீனொன்று காற்றில் பறந்து போனது.

(’புறவழிச் சாலை’  நூலிலிருந்து..)

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு