யாவர்க்குமானவை உலகில் இருக்கின்றன அல்லது உலகில் இருப்பவை யாவர்க்குமானவை அறிதலே முதன்மை. அறியக் கொடுப்பது கடமை. காரணங்கள் பலவாய் இருக்கலாம். சாதி,மதம், இனம், பொருளாதாரம்,சமூகம், மொழி, நாடு, நிலப்பகுதி,பால்என. காரணங்கள் பலவாய் இருக்கலாம். அடிமைப்படுத்தும் காரணிகள் எதுவாயினும் அது ஒருநோய்க்கூறு.நம்மில் இருந்தாலும் உடைத்து வெளிவரவேண்டும். அதிகாரப்பீடத்தில் கெட்டிதட்டிப்போயிருக்குமெனில் தகர்க்கவேண்டும். சமத்துவம் என்பதன் வெளியை உருவாக்கவேண்டும். மேற்சொன்ன காரணிகளில் பலகவனம் பெற்று பலராலும் உரக்கக்குரல் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றுள், மாறு பாலினத்தவர்க்கான உரிமைகள் உரிய அளவில் இன்னமும் கூடபேசப்படவில்லை என்பதே உண்மை. அதற்குக்காரணம் அவர்களின் பிரச்சனை குறித்த உண்மைத்தன்மை பொதுவெளியில் உரையாடலுக்கு பரவலாய் உட்படவில்லை. மாறு பாலினத்தவர் நலன் கோரி தேசிய சட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றம் 15-04-2014 அன்று வழங்கிய மேன்மைமிகு தீர்ப்புரையின் தமிழ்ப்பிரதி இது. ”எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்
Comments
Post a Comment